Versions
TOV பண்டிகைநாளில் கும்புகளை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்குத் திகில்களை வரவழைத்தீர்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைஞன் நாசம்பண்ணினான்.
IRVTA பண்டிகைநாளில் மக்கள் கூட்டத்தை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்கு பயத்தை வரவழைத்தீர்;
யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை;
நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைவன் அழித்தான். PE
ERVTA நீர் எல்லா இடங்களிலிருந்தும் பயங்கரங்களை என்மேல் வரசெய்தீர். பண்டிகை நாட்களுக்கு வரவழைப்பதுபோன்று நீர் பயங்கரங்களை வரவழைத்தீர். கர்த்தருடைய கோபநாளில் எவரும் தப்பவில்லை. நான் வளர்த்து ஆளாக்கியவர்களை என் பகைவன் கொன்றிருக்கிறான்.
RCTA தௌ: எப்பக்கமும் நடுக்கம் தரும் தன் எதிரிகளைத் திருவிழாக் கூட்டம்போல் கொண்டு வந்தீர்; ஆண்டவர் சினங்கொண்ட அந்த நாளில் ஒருவனும்- தப்பவில்லை, பிழைக்க வில்லை; அவர்களைச் சீராட்டி நான் வளர்த்தேன், பகைவனோ அவர்களைக் கொன்றெழித்தான்.
ECTA திருவிழாவுக்கு அழைப்பது போல, எப்பக்கமும் எனக்கெதிராகப் பேரச்சத்தை வரவழைத்தீர்! ஆண்டவரது சீற்றத்தின் நாளில் உயிர்தப்பிப் பிழைத்தவரோ எஞ்சியவரோ எவரும் இல்லை! நான் பேணி வளர்த்தவர்களை என் எதிரி கொன்றழித்தான்!