Versions
TOV கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA நான் அவர்களுக்கு எதிராக நான்கு வகை அழிவு சக்திகளை அனுப்புவேன்" இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. ‘நான் எதிரியை ஒரு வாளோடு கொல்வதற்கு அனுப்புவேன். நான் நாய்களை அவர்களது உடல்களை வெளியே இழுத்துவர அனுப்புவேன். நான் வானத்து பறவைகளையும், காட்டு மிருகங்களையும் அவர்களது உடல்களை உண்ணவும் அழிக்கவும் அனுப்புவேன்.
RCTA நால்வகை நாசக்காரரை அவர்களுக்கு எதிராய் நாம் ஏற்படுத்துவோம்: அவர்களை வதைக்க வாளையும், கிழிக்க நாய்களையும், அடித்துக் கடித்து விழுங்க வானத்துப் பறவைகளையும், பூமியின் மிருகங்களையும் அனுப்புவோம்.
ECTA ஆண்டவர் கூறுவது; நான்கு வகையான அழிவின் சக்திகளை அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்; கொல்வதற்கு வாளையும் இழுத்துச் செல்வதற்கு நாய்களையும் விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும் நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன்.