Bible Language

Jeremiah 9:10 (AKJV) American King James Version

Versions

TOV   மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாய் அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.
IRVTA   மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்திரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாமலிருக்க அவைகள் அழிக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; வானத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போனது.
ERVTA   நான் (எரேமியா) மலைகளுக்காக உரக்க அழுவேன். காலியான வயல்களுக்காக நான் ஒப்பாரிப் பாடலைப் பாடுவேன். ஏனென்றால், உயிர் வாழ்வன அனைத் தும் எடுக்கப்பட்டுவிடும். இப்பொழுது எவரும் அங்கு பயணம் செய்யமாட்டார்கள். ஆடுமாடுகளின் சத்தத்தை அங்கே கேட்கமுடியாது. பறவைகள் பறந்து போயிருக்கின்றன. மிருகங்கள் போய்விட்டன.
RCTA   "மலைகளைக் குறித்து ஒப்பாரி வைத்து அழுவோம்; பாலை நிலத்தில் இருக்கும் செழித்த இடங்களுக்காகப் புலம்புவோம்; ஏனெனில் அவையெல்லாம் பாழாக்கப்பட்டன; இனி அங்கே போகிறவன் எவனுமில்லை; ஆடுமாடுகளின் குரலொலி கேட்கவில்லை; வானத்துப் பறவைகளும், வயல்வெளி மிருகங்களும், எல்லாம் அங்கிருந்து ஓடிப்போயின.
ECTA   மலைகளைக் குறித்து அழுது புலம்புவோம்; பாழ்வெளி மேய்ச்சல் நிலத்தின் பொருட்டு ஒப்பாரி வைப்போம்; ஏனெனில் அனைத்தும் தீய்ந்து போயின; அவை வழியாய்ச் செல்வோர் யாருமில்லை; கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை; வானத்துப் பறவைகள் முதல் விலங்குகள் வரை அனைத்துமே ஓடி மறைந்து விட்டன.