Versions
TOV அவைகள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்.
IRVTA அவர்கள் காயப்பட்டவர்களைப்போல
பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும்,
தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி:
தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள்.
ERVTA அப்பிள்ளைகள் தம் தாய்மார்களிடம், "அப்பமும் திராட்சைரசமும் எங்கே?" எனக் கேட்கின்றனர். அவர்கள் இக்கேள்வியைக் கேட்ட வண்ணமாகவே அவர்களின் தாயின் மடியிலே மரிக்கின்றனர்.
RCTA லாமேத்: கத்தியால் குத்துண்டோர் சாய்வது போல நகரத்தின் தெருக்களில் வீழும் போதும், தங்களின் தாய்மார் மடிதனிலே ஆவியைத் துறக்கச் சாயும் போதும், தாய்மாரை நோக்கி, "உணவெங்கே?" எனக் கேட்டுக் கதறினார்கள்.
ECTA அவர்கள் தங்கள் அன்னையரிடம், "அப்பம், திராட்சை இரசம் எங்கே?" என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப்போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!