Versions
TOV ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!
IRVTA {எருசலேமின் துன்பம்} PS 2 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் * எருசலேம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!
விதவைக்கு ஒப்பானாளே! தேசங்களில் பெரியவளும்,
அந்த தேசங்களில் இளவரசியுமாயிருந்தவள் வரிகட்டுகிறவளானாளே!
ERVTA எருசலேம் ஒரு காலத்தில் ஜனங்கள் நிறைந்த நகரமாக இருந்தது. ஆனால் இப்போது, இந்த நகரம் வனாந்தரமாயுள்ளது! எருசலேம் உலகத்தில் பெரிய நகரங்களுள் ஒன்றாயிருந்தது. ஆனால் இப்போது, அவள் ஒரு விதவையைப் போன்றிருக்கிறாள். அவள் ஒரு காலத்தில் நகரங்களில் இளவரசியைப் போன்றிருந்தாள். ஆனால் இப்பொழுது அடிமையாக்கப்பட்டிருக்கிறாள்.
RCTA முதல் புலம்பல்: ஆலேஃப்: மக்கள் மலிந்த நகரமாயிருந்தவள் எவ்வளவோ தனியள் ஆனாளோ! மக்கள் இனங்களின் பேரரசி கைம்பெண் நிலைக்கு நிகரானாள்; மாநிலங்களுக்குத் தலைவியாயிருந்தவள் அடிமை நிலைக்கு உள்ளானாள்.
ECTA அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர் தனியளாய் அமர்ந்தனளே! நாடுகளில் மாண்புடையாள் விதவைபோல் ஆனாளே! மாநிலங்களின் இளவரசி அடிமைப்பெண் ஆயினளே!