Versions
TOV அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய எந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.
ERVTA அப்போது சக்திமிக்க தூதன் ஒருவன் ஒரு பெரும் பாறையைத் தூக்கி வந்தான். அது ஒரு பெரிய எந்திரக்கல்லைப் போல இருந்தது. கடலில் அப் பாறையைப் போட்டு விட்டு தூதன் சொன்னான்: இவ்வாறுதான் பாபிலோன் நகரமும் தூக்கி எறியப்படும். அந்நகரம் மீண்டும் ஒருக்காலும் காணப்படாமல் போகும்.