Versions
TOV அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.
IRVTA அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து,
எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்;
அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும்,
மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்;
பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்;
அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார்.
ERVTA கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார். கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார். அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார். கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்! இந்த முழு உலகமும் அவருக்குரியது!
RCTA பெருமக்களுடன் அமர்ந்து புகழ் அரியனை ஏற ஏழையைத் தூசியினின்றும், எளியோனைக் குப்பையினின்றும் உயர்த்துகிறார். பூமியின் அடித்தளங்கள் ஆண்டவருக்குச் சொந்தம், அவற்றின் மேல் உலகை நிறுவினார்.
ECTA புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்; குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்; உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை! அவற்றின் மேல் அவர் உலகை நிறுவினார்!