Versions
TOV ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள்; அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் அஸ்தமித்தது; வெட்கமும் இலச்சையும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் இளைத்துப்போகிறாள்; அவள் தன் உயிரை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கும்போது அவளுடைய சூரியன் மறைந்தது; வெட்கமும் அவமானமும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய எதிரிகளுக்கு முன்பாகப் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA எதிரி தன் வாள்களால் தாக்கி ஜனங்களைக் கொல்வான். யூதாவிலுள்ள மீதியிருப்பவர்களை அவர்கள் கொல்வார்கள். ஒரு பெண்ணுக்கு ஏழு மகன்கள் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் மரித்துப்போவார்கள். அவள் பலவீனமாகி மூச்சுவிடமுடியாத நிலை அடையும்வரை அழுவாள். அவள் திகைப்பும் குழப்பமும் அடைவாள். அவளது ஒளிமயமான பகல் துன்பமான இருட்டாகும்."
RCTA ஏழு பேரைப் பெற்றவள் சோர்வுற்றாள்; அவள் மயங்கி விழுந்தாள்; வெளிச்சம் இருக்கும் போதே அவள் வாழ்வின் மாலை நேரம் வந்து விட்டது, வெட்கமும் நாணமுமே அவளுக்குரியன. அவளுடைய மீதிப் பிள்ளைகளைப் பகைவர் முன்னிலையில் வாளுக்கு இரையாக்குவோம், என்கிறார் ஆண்டவர்."
ECTA எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்; மூச்சுத் திணறினாள்; அவள் கதிரவன் மறைந்து விட்டான்; அவள் வெட்கி நாணமுற்றாள்; எஞ்சியிருப்போரை அவர்களுடைய எதிரிகளின்முன் வாளுக்கு இரையாக்குவேன், "என்கிறார் ஆண்டவர்.