Versions
TOV பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
ERVTA சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன. ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை. சீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன. சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள். சீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர். இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது.