Bible Versions
Bible Books

2 Kings 6:15 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
IRVTA   தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
ERVTA   தேவ மனிதனின் (எலிசாவின்) வேலைக்காரன் காலையில் விரைவில் எழுந்து, வெளியே சென்றபோது படைவீரர்கள், குதிரைகள், மற்றும் இரதங்கள் ஆகியவற்றைக் கண்டான். எலிசாவின் வேலைக்காரன் (அவரிடம் ஓடி வந்து), "எஜமானரே! நாம் என்ன செய்யமுடியும்?" என்று கேட்டான்.
RCTA   கடவுளுடைய மனிதரின் ஊழியன் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும் குதிரைகளும் தேர்களும் நகரை முற்றுகையிட்டிருக்கக் கண்டு, தன் தலைவரிடம் ஒடிவந்து, "ஐயையோ! என்ன செய்வோம்?" எனப் பதறினான்.
ECTA   கடவுளுடைய அடியவரின் வேலைக்காரன் வைகறையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும், குதிரைகளும், தேர்களும் நகரைச் சூழ்ந்திருக்கக் கண்டு, "ஐயோ! என் தலைவரே, என்ன செய்வோம்?" என்று கதறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us