Versions
TOV அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.
IRVTA அவள் அவனுக்கு இடையூராக இருக்கவும், பெலிஸ்தர்களின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் நினைத்து, தாவீதை பார்த்து: நீ என்னுடைய இரண்டாம் மகளால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.
ERVTA எனவே, "மீகாளைப் பயன்படுத்தி தாவீதை சூழ்ச்சிக்குட்படுத்த வேண்டும். அவள் அவனை மணக்கட்டும். பிறகு அவன் பெலிஸ்தியர்களால் கொல்லப்படுவான்" என்று நினைத்த சவுல் இரண்டாம் தடவையாக, "இன்று என் மகளை மணமுடிக்கலாம்" என்றான்.
RCTA நான் அவளை அவனுக்கு கொடுப்பேன். ஏனெனில் அவள் அவனுக்கு இடையூறாய் இருப்பாள். பிலிஸ்தியர் கையும் அவன் மேல் விழும் என்று சவுல் சொன்னார். மேலும் அவனைப் பார்த்து, "நீ இரண்டு காரியங்களை முன்னிட்டு இன்று எனக்கு மருமகனாய் இருப்பாய்" என்றார்.
ECTA "நான் அவளை அவனுக்கு கொடுப்பேன். அவளும் அவனுக்கு மனைவியாய் இருப்பாள். பெலிஸ்தியரும் அவனுக்கு எதிராக எழுவர்" என்று சவுல் நினைத்து, தாவீதை நோக்கி, "இப்பொழுது என் இரண்டாம் மகள்மூலம் நீ என்மருமகனாய் ஆவாய்" என்று கூறினார்.