Versions
TOV அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால் மறந்தபின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.
IRVTA அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் யெகோவாவுக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் † அவன் வாழ்நாளெல்லாம் நசரேயனாக இருக்கும்படி அவனை ஆலயத்தில் விட்டுவிடுவேன்; என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள். PS
ERVTA ஆனால் அன்னாள் செல்லவில்லை, அவள் எல்க்கானாவிடம், "பிள்ளை வளர்ந்து திட உணவு உண்ணும் வயதை அடையும்பொழுது, நான் இவனைச் சீலோவிற்கு அழைத்து வருவேன். பிறகு அவனைக் கர்த்தருக்குத் தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் சீலோவிலேயே தங்கி இருப்பான்" என்றாள்.
RCTA அன்னா அவனுடன் போகவில்லை; அவளோ, "பிள்ளை பால்குடி மறக்கும் வரை நான் போகமாட்டேன்" என்றும், "அதன் பிறகு அவனை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கவும், அவன் எப்பொழுதும் அங்கு இருக்கவும் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போவேன்" என்றும் தன் கணவனுக்குச் சொன்னாள்.
ECTA ஆனால், அன்னா செல்லவில்லை, அவர் தம் கணவரிடம், "பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன், அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்" என்று சொன்னார்.