Versions
TOV அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
IRVTA அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: யெகோவாவிடத்தில் விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
ERVTA பிறகு அரசன் ஆகாப் யோசபாத்திடம், "இன்னும் ஒருவன் இங்கே இருக்கிறான். அவன் மூலமாக நாம் கர்த்தரிடம் கேட்கலாம். ஆனால் நான் அந்த மனிதனை வெறுக்கிறேன். ஏனென்றால் அவன் எனக்காக கர்த்தரிடமிருந்து எந்த நல்லச் செய்தியையும் சொல்லமாட்டான். எப்பொழுதும் அவன் எனக்காகக் கெட்ட செய்திகளையே வைத்திருப்பான். அவனது பெயர் மிகாயா, அவன் இம்லாவின் மகன்" என்றான். ஆனால் யோசபாத்தோ, "ஆகாப், நீ அப்படிச் சொல்லக்கூடாது!" என்றான்.
RCTA அதற்கு ஆக்காப், "ஆண்டவரின் திருவுளத்தைக் கேட்டு அறிவதற்கு மற்றொருவன் இருக்கிறான். ஆனால் அவன் எனக்குச் சாதகமாய் அன்று, பாதகமாகவே எப்போதும் இறைவாக்கு உரைக்கிறான். எனவே அவனை எனக்குப் பிடிக்காது. எம்லாவின் மகன் மிக்கேயாஸ் என்பவனே அவன்" என்றான். அதற்கு யோசபாத், "அரசே, நீர் அவ்விதமாய்ப் பேசவேண்டாம்" என்றான்.
ECTA அதற்கு ஆகாபு, "ஆண்டவரின் வாக்கைக் கேட்டறிவதற்கு இம்லாவின் மகன் மீக்காயா என்பவன் இருக்கிறான். ஆனால், நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் எனக்குச் சாதகமாய் அன்று, பாதகமாவே எப்பொழுதும் இறைவாக்கு உரைக்கிறான்" என்றான். அதற்கு யோசபாத்து, "அரசே நீர் அவ்விதமாய்ப் பேசவேண்டாம்" என்றார்.