Versions
TOV அப்பொழுது தாவீது தரையை விட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்கு வந்து, போஜனம் கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான்.
IRVTA அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தன்னுடைய ஆடைகளை மாற்றி, யெகோவாவுடைய ஆலயத்தில் நுழைந்து, தொழுதுகொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, உணவு கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது சாப்பிட்டான்.
ERVTA அப்போது தாவீது தரையிலிருந்து எழுந்து குளித்தான். பழைய ஆடைகளைக்களைந்து புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டான். பின்னர் அவன் கர்த்தருடைய வீட்டிற்குள் தொழுதுகொள்ளச் சென்றான். அதன் பின் தன் வீட்டிற்குப் போய் உண்பதற்கு ஏதாவது வேண்டுமெனக் கேட்டான். அவனது வேலைக்காரர்கள் கொடுத்த உணவை உண்டான்.
RCTA எனவே தாவீது தரையினின்று எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தம் ஆடைகளை மாற்றி ஆண்டவருடைய ஆலயத்தில் நுழைந்து ஆண்டவரைத் தொழுதார். பிறகு தம் வீட்டிற்கு வந்து அப்பம் கொண்டு வரச் சொல்லி அதைச் சாப்பிட்டார்.
ECTA உடனே தாவீது தரையினின்று எழுந்தார். குளித்து, நறு நெய் பூசி, உடைகளை மாற்றிக் கொண்டார். கடவுளின் இல்லம் சென்று அவரைத் தொழுதார். பிறகு அவர்தம் இல்லம் வந்தார். அவரே கேட்க, உணவு பரிமாறப்பட்டது. அவர் அதை உண்டார்.