Versions
TOV வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட ஜனமும் நில்லாமற்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது.
IRVTA வடக்குதிசை ராஜா வந்து, கோட்டைமதில்களைக் கட்டி, பாதுகாப்பான நகரங்களைப் பிடிப்பான்; தெற்கு திசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட மக்களும் நிலைநிற்காமல்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இருக்காது.
ERVTA பிறகு வடபகுதி அரசன் வந்து நகரத்தின் மதில்களுக்கெதிராகக் கொத்தளங்களைக் கட்டுவான். பிறகு பலமான நகரத்தைப் பிடிப்பான். தென் பகுதி படைக்குத் திரும்பவும் போரிட வல்லமை இராது. தென்பகுதிப் படையிலுள்ள சிறந்த வீரர்களும் வடபகுதிப் படையைத் தடுக்கிற வல்லமை இல்லாமல் இருப்பார்கள்.
RCTA வடதிசை அரசன் வந்து முற்றுகையிட்டு அரணால் சூழ்ந்த நகரங்களைக் கைப்பற்றுவான்; தென்றிசை மன்னனின் படைகள் எதிர்க்க வலிமையற்றுப்போம்; அவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் எதிர்க்க முடியாது நிற்பார்கள்; ஏனெனில் அவர்களுக்கும் வலிமையிராது.
ECTA வடதிசை மன்னன் வந்து முற்றுகையிட்டு நன்கு அரண் செய்யப்பட்ட நகரத்தைக் கைப்பற்றுவான்; தென்னகப் படைகள் எதிர்க்க வலிமையற்றுப் போகும்; அப்படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் எதிர்த்து நிற்க முடியாது போவார்கள்; ஏனெனில் அவர்களிடம் வலிமையே இராது.