Versions
TOV நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே; இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக்கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.
IRVTA நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட கனவு இதுவே; இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்; என் ராஜ்ஜியத்திலுள்ள ஞானிகள் எல்லோராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் சொல்லமுடியாமல்போனது; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.
ERVTA "நேபுகாத்நேச்சாரகிய நான் கண்ட கனவு இதுதான். இப்பொழுதுபெல்தெஷாத்சாரே (தானியேல்), இதன் பொருள் என்னவென்று சொல். எனக்காக என் இராஜ்யத்தில் உள்ள எந்த ஞானிக்கும் இதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால் பெல்தெஷாத்சாரே, நீ இதற்கு விளக்கமளிக்கமுடியும். ஏனென்றால் பரிசுத்த தேவனுடைய ஆவி உன்னில் இருக்கிறது.
RCTA (15) நபுக்கோதனசார் அரசனாகிய நான் கண்ட கனவு இதுவே; பல்தசாரே, இதன் உட்பொருளை எனக்கு விரைவில் தெரிவியும்; என் நாட்டிலுள்ள ஞானிகளுள் எவராலும் இதற்கு உட்பொருள் கூற இயலவில்லை; நீர் இதைத் தெரிவிக்கக் கூடியவர்; ஏனெனில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி உம்மிடத்தில் இருக்கிறது."
ECTA அரசர் நெபுகத்னேசராகிய நான் கண்ட கனவு இதுவே; பெல்தசாச்சார்! இதன் உட்பொருளை எனக்குத் தெரிவியும்! என் நாட்டிலுள்ள எல்லா ஞானிகளாலும் இதன் உட்பொருளை விளக்கிக் கூற இயலவில்லை. நீர் ஒருவரே இதைத் தெரிவிக்கக்கூடியவர்; ஏனெனில் புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது. "