Versions
TOV நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
IRVTA நீ வயலில் விதைத்த உன்னுடைய பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருடமுடிவிலே நீ வயலில் உன்னுடைய வேலைகளின் பலனைச் சேர்த்து முடிந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.
ERVTA "பெந்தெகோஸ்தே பண்டிகையானது ஆண்டின் இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும். உங்கள் வயல்களில் அறுவடை ஆரம்பிக்கும் கோடையின் தொடக்கத்தில் இந்த விடுமுறை நாள் வரும். "ஆண்டின் மூன்றாம் விடுமுறையானது அடைக்கலக் கூடாரப் பண்டிகையாக இருக்கும். இலையுதிர் காலத்தில் உங்கள் வயல்களின் எல்லாப் பயிர்களையும் சேர்க்கும் நாட்களில் இப்பண்டிகை வரும்.
RCTA உன் நிலத்திலே நீ எதை விதைத்திருந்தாலும் உன் வேலையால் கிடைத்த முதற் பலன்களின் அறுப்புக் காலத் திருவிழாவையும், ஆண்டு முடிவிலே உன் நிலங்களில் விளைந்த எல்லா விளைச்சல்களையும் சேர்த்துத் தீர்ந்த போது சேர்ப்புக்காலத் திருவிழாவையும் கொண்டாடி வருவாய்.
ECTA வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, "அறுவடைவிழா "வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் "சேகரிப்பு விழா "வும் எடுக்க வேண்டும்.