Versions
TOV அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
IRVTA அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.
ERVTA யோவான் அவர்களிடம் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளைச் சொன்னான். வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனின் ஓசையாக நான் இருக்கிறேன். ԅகர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள். ஏசாயா 40:3
RCTA "இறைவாக்கினரான இசையாஸ் கூறியபடி: ' ஆண்டவருடைய வழியைச் செம்மைப்படுத்துங்கள் என்று பாலைவனத்தில் உண்டாகும் கூக்குரல் ' நான்" என்றார்.
ECTA அதற்கு அவர், "'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது'என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே" என்றார்.