Versions
TOV இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ணவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.
IRVTA இஸ்ரவேல் மக்களான அவர்கள் எழுந்து, பெத்தேலுக்குப் போய்: எங்களில் யார் முதலில் போய் பென்யமீனியர்களோடு யுத்தம்செய்யவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் யெகோவா: யூதா முதலில் போகவேண்டும் என்றார்.
ERVTA இஸ்ரவேலர் பெத்தேல் நகரத்திற்குச் சென்றனர். பெத்தேலில் அவர்கள் தேவனிடம், "எந்தக் கோதிரத்தினர் முதலில் பென்யமீன் கோத்திரத்தைத் தாக்கவேண்டும்?" என்று கேட்டனர். கர்த்தர், யூதா முதலில் போகட்டும்" என்றார்.
RCTA இவர்கள் அனைவரும் எழுந்து சிலோவிலிருந்த கோயிலுக்குப் போனார்கள். அவர்கள் கடவுளை நோக்கி, "பெஞ்சமின் புதல்வருடன் போர் தொடுக்க எம் படையை நடத்திச் செல்பவன் யார்?" என்று கேட்டனர். அதற்கு ஆண்டவர், "யூதா உங்கள் தலைவனாய் இருக்கட்டும்" என்றார்.
ECTA அவர்கள் எழுந்து பெத்தேலுக்குச் சென்றனர். இஸ்ரயேல் மக்கள் யார் எங்களுக்காக முதலில் பென்யமின் மக்களுடன் போருக்குச் செல்வர்? என்று கடவுளிடம் கேட்டனர். ஆண்டவர் முதலில் யூதா செல்லட்டும் என்றார்.