Versions
TOV நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.
IRVTA நாங்கள் பட்டயத்தால் மடியும்படியும், எங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படியும், யெகோவா எங்களை இந்த தேசத்திற்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்திற்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ” என்றார்கள்.
ERVTA நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது" என்றனர்.
RCTA அவர்களை நோக்கி: நாங்கள் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் நலமாயிருந்திருக்கும். நாங்கள் வாளால் வெட்டுண்டு மடியும்படியாகவும், எங்களை மனைவி மக்கள் பிடியுண்டு கொண்டுபோகப் படும்படியாகவும் ஆண்டவர் எங்களை அந்த நாட்டிற்குக் கொண்டு போவதைவிட, நாங்கள் இப்பொழுதே இப்பெரிய பாலைவனத்தில் செத்து மடிவது நலமே. எகிப்துக்குத் திரும்பிப் போவதும் சிறந்ததே என்றார்கள்.
ECTA வாளுக்கு இரையாகும்படியா ஆண்டவர் எங்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்? எங்கள் மனைவியரும் குழந்தைகளும் மடியப்போகிறார்கள்! நாம் எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் செல்வது நலமன்றோ?" என்றனர்.