Versions
TOV இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.
IRVTA இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே.
ERVTA இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்கு மட்டும் வருவதில்லை. விருத்தசேதனம் செய்யாதவர்களுக்கும் வரும். ஆபிரகாமின் விசுவாசம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவனும் நீதிமான் ஆனான்.
RCTA இனி, பேறு பெற்றவன் என்னும் அந்த ஆசிமொழி விருத்தசேதனம் உள்ளவனுக்கு மட்டுமா? இல்லாதவனுக்கும் கூடவா? 'ஆபிரகாமின் விசுவாசத்தை முன்னிட்டு இறைவன் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்' என்கிறோமே, அவர் எந்த நிலையில் இருக்கும்போது இறைவன் அவ்வாறு மதித்தார்?
ECTA பேறுபெற்றோர் விருத்தசேதனம் செய்து கொண்டோர் மட்டுமா? செய்யாதோரும் கூடவா? "ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்; அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்" என்றோமே.