Bible Versions
Bible Books

2 Samuel 15:21 (KJV) King James Version

Versions

TOV   ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
IRVTA   ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பதிலாக: ராஜாவான என்னுடைய ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று யெகோவாவுடைய ஜீவனையும் ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
ERVTA   ஆனால் ஈத்தாய் அரசனுக்குப் பதிலாக, "கர்த்தர் உயிரோடிருப்பதைப்போல நீங்கள் வாழும் காலம் வரைக்கும் நான் உங்களோடு இருப்பேன். வாழ்விலும், மரணத்திலும் நான் உங்களோடு இருப்பேன்!" என்றான்.
RCTA   எத்தாயி அரசரை நோக்கி, "ஆண்டவர்மேல் ஆணை! என் தலைவராகிய அரசரின் உயிர்மேல் ஆணை! என் தலைவரான அரசே, நீர் எங்கு இருப்பீரோ அங்கே உம் அடியானாகிய நானும் இருப்பேன்; வாழ்ந்தாலும் மடிந்தாலும் இங்கேயே இருப்பேன்" என்று கூறினான்.
ECTA   இத்தாய் அதற்கு மறுமொழியாக, வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவராம் அரசர் மேல் ஆணை! வாழ்வாகட்டும். சாவாகட்டும். என் தலைவராம் அரசர் எங்கிருப்பாரோ, அங்கே உம் அடியானும் இருப்பான்" என்று அரசரிடம் கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us