Versions
TOV எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
IRVTA எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார்.
ERVTA எல்லா மக்களும் அச்சிறுமி இறந்ததற்காக அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இயேசு, அழாதீர்கள். அவள் இறக்கவில்லை. அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்றார்.
RCTA அனைவரும் அவளுக்காக மாரடித்து அழுதுகொண்டிருந்தனர். அவரோ, "அழ வேண்டாம். அவள் சாகவில்லை, தூங்குகிறாள்" என்றார்.
ECTA அவளுக்காக அனைவரும் மாரடித்துப் புலம்பி அழுதுகொண்டிருந்தார்கள். இயேசுவோ, "அழாதீர்கள்; இவள் இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார்.