Versions
TOV யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ளவந்தோம் என்றார்கள்.
ERVTA யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்ததும், உடனே அடையாளம் கண்டு கொண்டான். எனினும் தெரிந்துகொண்டதைப் போல் காட்டிகொள்ளாமல் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டான். "எங்கேயிருந்து வருகின்றீர்கள்?" என்று கேட்டான். அவர்கள், "நாங்கள் கானான் பகுதியிலிருந்து வருகிறோம். உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வந்தோம்" என்றனர்.