Versions
TOV அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக்கூடாதே போயிற்று.
IRVTA அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாட்கள்வரை விடுவிக்கமுடியாமற்போனது.
ERVTA சிம்சோன் அவர்களிடம், ‘சாப்பிடுவோரிடமிருந்து சாப்பிடுவதற்குக் கொஞ்சம் கிடைத்தது. பலமானவரிடமிருந்து இனிப்பும் கிடைத்தது’ என்ற விடுகதையைச் சொன்னான். 30 பேரும் 3 நாட்கள் இந்த விடுகதையை விடுவிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
RCTA அப்போது சாம்சன் அவர்களைப் பார்த்து, "உண்போனிடமிருந்து உணவும், வலியோனிடமிருந்து இனிமையும் வெளிப்பட்டன" என்றான். முன்று நாட்களாக அதை அவர்கள் விடுவிக்க முடியவில்லை.
ECTA அவர் அவர்களிடம், "உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது; வலியவனிடமிருந்து இனியது வந்தது" என்றார். மூன்று நாளாகியும் அவர்களால் விடு கதைக்கு விடை காணமுடியவில்லை.