Versions
TOV ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகைநாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்.
IRVTA ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்;
தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்;
அதினுடைய அரண்மனைகளின் மதில்களை விரோதியின் கையில் ஒப்புக்கொடுத்தார்;
பண்டிகைநாளில் ஆரவாரம் செய்கிறதுபோல் யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
ERVTA கர்த்தர் அவரது பலிபீடத்தையும் தனது தொழுவதற்குரிய பரிசுத்தமான இடத்தையும் புறக்கணித்தார். அவர் எருசலேமின் அரண்மனை சுவர்களை இடித்துப்போடும்படி பகைவர்களை அனுமதித்தார். பண்டிகை நாளில் ஆரவாரம் செய்வதுபோல் கர்த்தருடைய ஆலயத்தில் ஆரவாரம் பண்ணினர்.
RCTA ஸாயின்: ஆண்டவர் தம் பீடத்தின்மேல் வெறுப்புக்கொண்டார், இந்தப் பரிசுத்த இடமே வேண்டாமென்றார்; அவளுடைய அரண்மனை மதில்களையும் மாற்றானின் கைகளில் ஒப்புவித்தார்; திருவிழா நாள் போலப் பேரிரைச்சல் ஆண்டவரின் கோயிலில் எழுப்பினார்கள்.
ECTA என் தலைவர் தம் பலிபீடத்தை வெறுத்தொதுக்கினார். தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்; அதன் கோட்டைச் சுவர்களைப் பகைவரிடம் கையளித்தார்; விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல ஆண்டவரின் இல்லத்தில் அவர்கள் ஆரவாரம் செய்தனர்;