Versions
TOV எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
IRVTA எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னைப் பெத்தேல்வரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
ERVTA எலியா எலிசாவிடம், "நீ இங்கே இரு. கர்ததர் என்னைப் பெத்தேலுக்குப் போகச்சொன்னார்" என்றான். ஆனால் எலிசாவோ, "நான் உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் உங்கள் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்" என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குச் சென்றார்கள்.
RCTA எலியாசு எலிசேயுவைப் பார்த்து, "ஆண்டவர் என்னைப் பேத்தலுக்கு அனுப்பியிருக்கின்றார். ஆதலின் நீ இங்கேயே இரு" என்றார். எலிசேயு அவரை நோக்கி, "ஆண்டவர் மேலும் உம் உயிரின் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரிய மாட்டேன்" என்று பகன்றார். இங்ஙனம் இருவரும் பேத்தலுக்குப் போனார்கள்.
ECTA எலிசா எலிசாவை நோக்கி, "ஆண்டவர் என்னைப் பெத்தேலுக';கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு" என்றார். எலிசா அவரை நோக்கி, "வாழும் ஆண்டவர்மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார். ஆகவே அவர்கள் பெத்தேலுக்குப் போனார்கள்.