Versions
TOV பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும், கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.
IRVTA பூமி தன் தாவரங்களை முளைக்கச்செய்வது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைக்கச்செய்வது போலவும், யெகோவாவாகிய ஆண்டவர் எல்லா தேசங்களுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கச்செய்வார். PE
ERVTA தாவரங்கள் வளர பூமி காரணமாக இருந்தது. ஜனங்கள் தோட்டத்தில் விதைகளைத் தூவினார்கள். தோட்டம் அந்த விதைகளை வளர வைத்தது. அதே வழியில் கர்த்தர் நீதியை வளரச் செய்வார். அனைத்து நாடுகளிலும் கர்த்தர் துதியை வளரச் செய்வார்."
RCTA ஏனெனில், நிலமானது தன் விதைகளை முளைக்கச் செய்வது போலும், தோட்டமானது தன்னில் நட்டதைத் தளிர்க்கச் செய்வது போலும், எல்லா இனத்தாரின் முன்னிலையில் நீதியையும் புகழ் மொழியையும் கடவுளாகிய ஆண்டவர் தளிர்க்கச் செய்வார்.
ECTA நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.