Versions
TOV நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.
IRVTA நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுமொழி கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கமுடியாதபடிக்கு என் கரம் குறுகிவிட்டதோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கடிந்துகொள்ளுதலினாலே கடலை வற்றச்செய்து, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாற்றமெடுக்கின்றது.
ERVTA நான் வீட்டிற்கு வந்தேன். அங்கே யாருமில்லை. நான் அழைத்து அழைத்துப் பார்த்தேன். எவரும் பதில் சொல்லவில்லை. நான் உன்னைக் காப்பாற்ற முடியாது என்று நினைத்தாயா?நான் உனது துன்பங்களிலிருந்து உன்னைக் காப்பாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறேன். பார், நான் கடலை வற்றிப் போகும்படி கட்டளையிட்டால் பிறகு அது வற்றிப்போகும். மீன், தண்ணீரில்லாமல் மரிக்கும். அவற் றின் உடல் அழுகும்.
RCTA ஏனெனில் நாம் வந்த போது, ஒருவனையும் காணோமே! நாம் அழைத்த போது, ஒருவனும் பதில் தரவில்லையே! உங்களை மீட்க முடியாத அளவுக்கு நமது கை குறுகிச் சிறியதாகி விட்டதோ? உங்களை மீட்க நமக்கு ஆற்றல் இல்லையோ? இதோ, நமது பயமுறுத்தலால் கடலை மணல் திடலாக்குவோம், ஆறுகளை வற்றிப் போகச் செய்வோம்; தண்ணீரில்லாமல் மீன்கள் நொந்து போகும், தாகத்தினால் யாவும் செத்துப் போகும்.
ECTA நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற் போனதேன்? நான் அழைத்தபோது பதில் தர எவனும் இல்லாததேன்? உங்களை மீட்க இயலாதவாறு என்கை சிறுத்துவிட்டதோ? விடுவிக்கக் கூடாதவாறு என் ஆற்றல் குன்றிவிட்டதோ? இதோ என் கடல்தனை வற்றச் செய்கிறேன்; ஆறுகளைப் பாலையாக்குகிறேன்; அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன; தாகத்தால் சாகின்றன.