Versions
TOV நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
IRVTA நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;
என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு,
தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்;
நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
ERVTA "என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை! எனது பகைவர்கள் எல்லாரும் என் துன்பத்தைக் கேள்விப்பட்டு, அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். நீர் இவற்றை எனக்குச் செய்ததால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தண்டனைக்குரிய காலம் வரும் என்று நீர் சொன்னீர். எனது பகைவர்களைத் தண்டிப்பதாகச் சொன்னீர். நீர் என்ன சொன்னீரோ அதை இப்பொழுது செய்யும். நான் இப்பொழுது இருப்பதுபோன்று என் பகைவரும் இருக்கட்டும்.
RCTA ஷின்: "நான் விம்முவதை நீர் கேட்டருளும், தேற்றுவார் எனக்கு யாருமில்லை; என் துன்பத்தைப் பகைவரெல்லாம் கேள்விப்பட்டார், நீர் இதைச் செய்ததற்காக அகமகிழ்ந்தார்; நீர் குறிப்பிட்ட நாள் வரச் செய்யும், அப்போது அவர்கள் என்னைப் போல் ஆவார்கள்.
ECTA நான் விடும் பெருமூச்சை அவர்கள் கேட்டார்கள்; என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை; என் எதிரிகள் அனைவரும் எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக் கேள்வியுற்றனர்; நீரே அதைச் செய்தீர் என மகிழ்ச்சி அடைகின்றனர்! நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்! அவர்களும் என்னைப்போல் ஆகட்டும்!