Bible Versions
Bible Books

Mark 15:32 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
IRVTA   நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள். PS
ERVTA   இவன் உண்மையிலேயே கிறிஸ்து என்றால், யூதர்களின் மன்னன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளலாமே. நாங்கள் அதைப் பார்த்தால் இவனை நம்புவோமே என்றனர். இயேசுவின் இருபுறமும் அறையப்பட்ட கள்ளர்களும் இயேசு வைப்பற்றி அவதூறாகப் பேசினர்.
RCTA   (31) இஸ்ராயேலின் அரசனாகிய மெசியா இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும்; கண்டு நம்புவோம்" என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். அவருடன் அறையுண்டவர்களும் அவர்மேல் வசைகூறினர்.
ECTA   அவர்கள், "இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்" என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us