Bible Versions
Bible Books

1 Kings 20:33 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.
IRVTA   அந்த மனிதர்கள் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின்சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடம் வந்தபோது, அவனைத் தன்னுடைய இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.
ERVTA   அவர்கள், பெனாதாத்தைக் கொல்லாமல் இருக்க வாக்குறுதிகளைக் கேட்டனர். ஆகாப் பெனாதாத்தைச் சகோதரன் என அழைத்ததும் அவனது ஆலோசகர்களும், "ஆமாம், அவன் உன் சகோதரன்" என்றனர். ஆகாப், "என்னிடம் அவனைக் கொண்டு வா" என்றான். எனவே பெனாதாத் அரசனிடம் வந்தான். ஆகாப் அரசன் அவனிடம், அவனோடு இரதத்தில் ஏறுமாறு சொன்னான்.
RCTA   இது நன்மைக்கு அடையாளம் என்று சீரியர் கண்டு, அவன் சொற்களைக் கேட்ட ஆத்திரத்தில்,"உன் சகோதரர் பெனாதாத் உயிரோடு இருக்கிறார்" என்றனர். அப்பொழுது அவன், "நீங்கள் போய் அவனை அழைத்து வாருங்கள்" என்றான். எனவே பெனாதாத் அவனைக் காண வந்தான். ஆக்காப் அவனைத் தன் தேரில் ஏற்றினான்.
ECTA   அந்த ஆள்கள் இச்சொற்களை நல்லதோர் அடையாளமாக எடுத்துக்கொண்டு, அவன் சொற்களிலேயே உடனடியாக "ஆம் , உம் சகோதரர் பெனதாது உயிரோடிருக்கின்றார்" என்று பதிலளித்தனர். அப்போது அவன், "நீங்கள் போய் அவரை அழைத்து வாருங்கள்" என்றான். பெனதாது அவனிடம் வந்ததும் ஆகாபு அவனைத் தேரில் ஏற்றிக்கொண்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us