Bible Versions
Bible Books

Jeremiah 14:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
IRVTA   என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் மக்களென்கிற மகளாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் பெரிய காயத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
ERVTA   "எரேமியா, யூதாவின் ஜனங்களிடம் இச்செய்தியைக் கூறு, ‘எனது கண்கள் கண்ணீரால் நிரம்பியுள்ளன. நான் இரவும் பகவும் நிறுத்தாமல் அழுவேன். நான் எனது மகளான கன்னிக்காக அழுவேன். நான் எனது ஜனங்களுக்காக அழுவேன். ஏனென்றால், யாரோ ஒருவர் அவர்களைத் தாக்குவர், அவர்களை நசுக்குவர், அவர்கள் மிக மோசமாகக் காயப்படுவார்கள்.
RCTA   நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: 'என் கண்கள் இடைவிடாது இரவும் பகலும் கண்ணீர் சொரியட்டும்; ஏனெனில் என் இனமாகிய கன்னிப்பெண் நொறுக்குண்டு நைந்து படுகாயமுற்றாள்;
ECTA   நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு; "என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னிமகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us