Versions
TOV அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்.
IRVTA அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: “இளைஞனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேட்காமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவனுடைய இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது” என்றான்.
ERVTA பிறகு ரூபன் அவர்களிடம், "அவனுக்கு எந்தத் தீமையும் செய்யவேண்டாம் என்று நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் நான் சொன்னதை நீங்கள் கேட்கவில்லை. அவனது மரணத்துக்கு நாம் இப்போது தண்டனை அனுபவிக்கிறோம்" என்றான்.
RCTA அவர்களில் ஒருவனான ரூபன் அவர்களை நோக்கி, சிறுவனுக்கு விரோதமாய்த் தீங்கு யாதொன்றும் செய்யாதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமல் போனீர்களே! இதோ, அவனுடைய இரத்தம் நம்மைப் பழி வாங்குகிறது என்றான்.
ECTA அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், "பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈவு கேட்கிறது என்றார்.