Versions
TOV வனாந்தரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும் என்று அக்காலத்திலே இந்த ஜனத்தோடும் எருசலேமோடும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
IRVTA வனாந்திரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் மக்களாகிய மகளுக்கு நேராக வீசும் என்று அக்காலத்தில் இந்த மக்களுடனும் எருசலேமுடனும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
ERVTA அந்த நேரத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கப்படும். "வறண்ட மலைகளிலிருந்து, ஒரு சூடான காற்று வீசுகிறது. இது எனது ஜனங்களிடம் வனாந்தரத்திலிருந்து வருகிறது. இது, உழவர்கள் தமது தானியங்களைப் பதரிலிருந்து, பிரித்தெடுக்கப் பயன்படுத்தும் காற்றைப் போன்றில்லை.
RCTA அக்காலத்தில் இந்த மக்களும் யெருசலேமும் கேள்விப்படுவார்: "நம் மக்கள் என்னும் மகளை நோக்கிப் பாலைநிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அக்கினிக் காற்று வீசும்; அது தூற்றவும், தூய்மைப்படுத்தவும் பயன்பட வருங் காற்றன்று;
ECTA அக்காலத்தில் இம்மக்களுக்கும் எருசலேமுக்கும் இவ்வாறு கூறப்படும்; பாலை நிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அனல்காற்று என் மகளாகிய மக்கள்மீது வீசும். அது தூற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்குமான காற்றன்று.