Versions
TOV சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.
IRVTA சேனைகளுடைய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கோட்டைமதில் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.
ERVTA சர்வ வல்லமையுள்ள கர்த்தர், "எருசலேமை சுற்றியுள்ள மரங்களை வெட்டிப்போடுங்கள், அதன் சுவருக்கு எதிராக எடுசுவரை எழுப்புங்கள். இந்த நகரம் தண்டிக்கப்படவேண்டும்! இந்த நகரத்தின் உட்பகுதியில் கொடுமையைத் தவிர வேறு எதுவுமில்லை.
RCTA ஏனெனில் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "அதன் மரங்களை வெட்டுங்கள்; யெருசலேமைச் சுற்றிக் கொத்தளம் எழுப்புங்கள்; அது தண்டிக்கப்பட வேண்டிய பட்டணம்; அதனுள் காணப்படுவது கொடுமை தவிர வேறில்லை.
ECTA படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அவளுடைய மரங்களை வெட்டுங்கள்; எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்; அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்; அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே.