Versions
TOV அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.
IRVTA அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் யெகோவாவுடைய வார்த்தையாக என்னோடு சொன்னான் என்று அவனிடம் பொய் சொன்னான்.
ERVTA பிறகு முதிய தீர்க்கதரிசி "நானும் உங்களைப் போன்று தீர்க்கதரிசிதான்" என்றான். மேலும் அவன் ஒரு பொய்ச் சொன்னான். அவன், "தேவதூதன் ஒருவன் கர்த்தரிடத்திலிருந்து வந்தான். அவன் உங்களை எனது வீட்டிற்கு அழைத்துப்போய் உண்ணவும் குடிக்கவும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான்" என்றான்.
RCTA அதற்கு அவர், "உம்மைப்போல நானும் ஓர் இறைவாக்கினர் தான். 'அவர் சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்க நீ அவரை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ' என்று ஒரு தூதர் ஆண்டவருடைய பெயரால் எனக்குச் சொன்னார்" என்று உரைத்து அவரை ஏமாற்றினார்.
ECTA அதற்கு முதியவர், "உம்மைப் போல் நானும் இறைவாக்கினர்தான். 'உணவருந்திக் தண்ணீர் குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ' என்று ஆண்டவர் ஒரு வானதூதர் வாயிலாக எனக்குச் சொன்னார்" என்றார். ஆனால் அவர் சொன்னதோ பொய்.