Versions
TOV அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
IRVTA அவர்: ஆமோஸே, நீ எதைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
ERVTA "ஆமோஸ் நீ என்ன பார்க்கிறாய்?" என்று என்னிடம் கேட்டார்" நான், "ஒரு கோடைக்கனியுள்ள கூடை" என்றேன். பிறகு கர்த்தர் என்னிடம், "எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி அவர்களின் பாவங்களை நான் கவனிக்காமல் விடமாட்டேன்.
RCTA அவர், "ஆமோசே, என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்; நான், "கனிந்த பழங்களுள்ள கூடை" என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: "நம் மக்களாகிய இஸ்ராயேல் மீது முடிவு வந்து விட்டது, இனி அவர்களை ஒருபோதும் மன்னியோம்.
ECTA அவர், "ஆமோஸ்! என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்; நான், "கனிந்த பழங்கள் உள்ள கூடை" என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்; "என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது; இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.