Versions
TOV அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தமாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.
IRVTA அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.
ERVTA "ஒருவேளை ஒருவன் தன் ஆடை மடிப்புக்குள் கொஞ்சம் இறைச்சியைக் கொண்டுபோகிறான். அந்த இறைச்சி பலிக்குரிய பகுதியாகும். எனவே அது பரிசுத்தமாகிறது. அந்த ஆடைகள் கொஞ்சம் அப்பத்தையோ, சமைத்த உணவையோ, திராட்சை ரசம், எண்ணெய் அல்லது மற்ற உணவையோ தொட்டால் பரிசுத்தமாகுமா? ஆடைப்பட்ட அந்தப் பொருட்களும் பரிசுத்தமாகுமா?" ஆசாரியர்கள், "இல்லை" என்றனர்.
RCTA (11) 'ஒருவன் தன் மேலாடையின் முனையில் அர்ச்சிக்கப்பட்ட இறைச்சியை முடிந்து எடுத்துக் கொண்டு போய், அத்துணி நுனியால் அப்பத்தையோ இறைச்சியையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறெந்த உணவுப் பொருளையோ தொடுவானாகில், அவை அர்ச்சிக்கப்படுமோ?' என்று கேள்" என்றார். அவ்வாறே கேட்க, அர்ச்சகர்கள், "இல்லை" என விடை பகர்ந்தனர்.
ECTA "ஒருவன் தனது மேலாடையின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொண்டு போகும் பொழுது, அத்துணியின் மடிப்பு அப்பத்தையோ இறைச்சியையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறெந்த உணவுப்பொருளையோ தொட்டால், அவையும் அர்ப்பணிக்கப்பட்டவை ஆகுமா?" அதற்குக் குருக்கள், "இல்லை" என்று விடை கூறினர்.