Versions
TOV தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
IRVTA தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடுக்காதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தமாகி, என் மக்களை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்:
ERVTA சில பொய்த் தீர்க்கதரிகள் கர்த்தருடைய ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி இதனைச் சொல்கிறார். "இந்தத் தீர்க்கதரிசிகள் வயிற்றுக்காக உழைக்கிறவர்கள். உணவு கொடுக்கும் ஜனங்களுக்குச் சமாதானம் வரும் என்று உறுதி கூறுவார்கள். ஆனால் உணவு கொடுக்காதவர்களிடத்தில் அவர்களுக்கு எதிராக போர் வரும் என்று உறுதி கூறுவார்கள்.
RCTA என் மக்களைத் தவறான நெறியில் நடத்துகிற தீர்க்கதரிசிகளைக் குறித்து ஆண்டவர் சொல்லுகிறார்: வயிற்றுக்குத் தீனி கிடைக்கும் வரையில் "சமாதானம்!" என்று முழங்குகிறார்கள்; எவனாவது அவர்களுக்கு உண்ணக் கொடுக்கவில்லையெனில், அவனுக்கு எதிராய்ப் போர் தொடுக்கிறார்கள்.
ECTA இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; "அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் 'அமைதி உண்டாகுக!' என உரக்கச் செல்கின்றார்கள்; வாய்க்குத் தீனி போடாதவரிடம் 'புனிதப் போர் வரும்;' எனக் கூறுகின்றார்கள்."