Bible Versions
Bible Books

1 Kings 12:16 (NCV) New Century Version

Versions

TOV   ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
IRVTA   ராஜா தாங்கள் சொன்னவைகளைக் கேட்காததை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவிற்கு மறுமொழியாக:
“தாவீதோடு எங்களுக்குப் பங்கேது?
ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை;
இஸ்ரவேலே, உன்னுடைய கூடாரங்களுக்குப் போய்விடு;
இப்போது தாவீதே,
உன்னுடைய சொந்த வீட்டைப் பார்த்துக்கொள்” என்று சொல்லி,
இஸ்ரவேலர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். PEPS
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் புதிய அரசன் தங்கள் வேண்டுகோளைக் கேட்டுக் கொள்ளவில்லை என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் அரசனிடம், "நாங்கள் தாவீதின் குடும்பத்தினர்கள்தானா? இல்லை. ஈசாயின் நிலத்தில் எங்களுக்குப் பங்கிருக்கிறதா? இல்லை! எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தம்தம் சொந்த நிலத்திற்கு திரும்பிப் போகட்டும் தாவீதின் மகன் தமது ஜனங்களை மட்டும் ஆளட்டும்!" என்று கூறினர். எனவே அவர்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
RCTA   மன்னன் தங்களுக்குச் செவி கொடாததைக் கண்ட மக்கள் அரசனுக்கு மறுமொழியாக, 'தாவீதோடு எங்களுக்குப் பங்கு ஏது? இசாயியின் மகனிடம் எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இஸ்ராயேலே உன் கூடாரத்திற்குப் போய்விடு. தாவீதே உன் வீட்டுக் காரியத்தை நீயே கவனித்துக் கொள்" என்று சொல்லி இஸ்ராயேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டனர்.
ECTA   இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்து விட்டதைக் கண்டு, "எங்களுக்குத் தாவீதுடன் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ராயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்புங்கள். தாவீதே! உன்வீட்டை நீயே பார்த்துக்கொள்!" என்று அவனுக்கு எதிராக முழங்கிக் கொண்டே தம் கூடாரங்களுக்குத் திரும்பினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us