Versions
TOV மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
IRVTA மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான்.
ERVTA எலியா மத்தியானத்தில் அவர்களைக் கேலிச் செய்தான், "உண்மையில் பாகால் தெய்வமானால் சத்தமாக ஜெபியுங்கள்! அவர் ஒருவேளை தியானத்தில் இருப்பார்! அல்லது வேறு வேலையில் இருப்பார்! அல்லது எங்காவது போயிருப்பார்! அல்லது தூங்கியிருப்பார்! எழுப்புங்கள்!" என்று கூறினான்.
RCTA நண்பகல் வேளையில் எலியாசு கிண்டலாக அவர்களை நோக்கி, "இன்னும் உரத்த குரலில் செபியுங்கள்; அவர் கடவுள் அல்லரோ? சிலவேளை அவர் உரையாடிக் கொண்டிருப்பார்; அல்லது சத்திரத்தில் தங்கியிருப்பார்; அல்லது அவர் பயணம் சென்றிருக்கக் கூடும்; ஒருவேளை, அவர் தூங்கிக் கொண்டிருப்பார்; எனவே, அவரை எழுப்ப வேண்டியிருக்கலாம்" என்றார்.
ECTA நண்பகலாயிற்று. எலியா அவர்களைக் கேலி செய்து, "இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அல்லது தூங்கிக் கொண்டிருக்கலாம்; அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்!" என்றார்.