Versions
TOV யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.
IRVTA {யோவாஸ் தேவாலயத்தைப் பழுதுபார்த்தல்} PS யெகூவின் ஏழாம் வருட ஆட்சியில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; பெயெர்செபா ஊரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் சிபியாள்.
ERVTA இஸ்ரவேலில் யெகூ தன் ஆட்சியை ஏழாம் ஆண்டில் நடத்திக்கொண்டிருக்கும்போது யோவாஸ் ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். பெயெர் செபாவிலுள்ள சிபியாள் என்பவள்தான் யோவாசின் தாயார்.
RCTA ஏகு ஆட்சி புரிந்த ஏழாம் ஆண்டில் யோவாசு அரியணை ஏறி யெருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெத்சாபே ஊராளாகிய அவனுடைய தாயின் பெயர் சேபியா.
ECTA ஏகூ ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யோவாசு அரசனாகி எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவன் தாய்.