Versions
TOV நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.
IRVTA நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு * வட தேசத்தின் கோத்திரங்களோடு போர்செய்யாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாக போர்செய்வதைத் தவிர்த்துத் திரும்பிப் போய்விட்டார்கள். PS
ERVTA கர்த்தர் சொன்ன செய்திகள் இவை தான்: ‘உன் சகோதரர்களோடு நீ சண்டை போடாதே! ஒவ்வொருவரையும் தம் சொந்த வீட்டுக்குப் போகவிடு. நான் இவ்வாறு நிகழும்படிச் செய்தேன்." எனவே ரெகொபெயாமும் அவனது படையும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து திரும்பி வந்தது. அவர்கள் யெரொபெயாமைத் தாக்கவில்லை. பலப்படுத்துகிறான்
RCTA நீங்கள் உங்கள் சகோதரரை எதிர்த்துப் போரிடச் செல்ல வேண்டாம். நம்மாலே இச்செயல் நடந்துற்றமையால், நீங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள் என்று சொல்லுகின்றார்' என்பாய்" என்பதாம். அவர்கள் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு எரொபோவாமுக்கு எதிராய்ப் போரிடுவதை நிறுத்திவிட்டுத் தங்கள் வீடு திரும்பினர்.
ECTA 'ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் படையெடுத்துச் சென்று, உம் சகோதரருடன் போரிட வேண்டாம். அவரவர் தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; ஏனெனில் என்னாலேயே இச்செயல் நிகழ்ந்தது. "ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள், எரொபவாமுக்கு எதிராகச் செல்வதைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.