Versions
TOV அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
IRVTA அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; யெகோவாவுடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
ERVTA எனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
RCTA அப்பொழுது மோயீசனும் ஆரோனும் மக்களை அனுப்பிவிட்டு, உடன்படிக்கைக் கூடாரத்தினுள் போய்த் தரையில் குப்புற விழுந்து, ஆண்டவரை நோக்கி ஆண்டவராகிய கடவுளே! இந்த மக்களின் கூக்குரலைக் கேட்டருள்வீர். அவர்கள் திருப்தியடைந்து முறுமுறுக்காதபடி உமது செல்வமாகிய நல்ல நீரூற்றைத் தந்தருள்வீர் என்றார்கள். அந்நேரமே ஆண்டவருடைய மாட்சி அவர்களுக்குக் காணப்பட்டது.
ECTA பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர். ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது.