Versions
TOV அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
IRVTA அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான்.
ERVTA தேவதூதன் வெளியே சென்றான். பேதுரு வும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண் மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான்.
RCTA இராயப்பர் தூதரோடு வெளியே போனார். வான தூதரின் வாயிலாக நிகழ்ந்ததெல்லாம் உண்மை என்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக நினைத்துக்கொண்டார்.
ECTA பேதுரு வானதூதரைப் பின் தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதொ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார்.