Versions
TOV கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே யாக்கோபு வம்சத்து ஜனங்களுக்கு நான் ஆணையிட்டு, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று ஆணையிட்டேன்.
IRVTA யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே யாக்கோபு வம்சத்து மக்களுக்கு நான் வாக்கு கொடுத்து, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று வாக்களித்தேன்.
ERVTA நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: "எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நான் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்த நாளில், நான் யாக்கோபின் குடும்பத்தின்மேல் என் கையை உயர்த்தி, நான் அவர்களுக்கு முன்னால், எகிப்தில், என்னை வெளிப்படுத்தினேன். என் கையை உயர்த்தி நான் சொன்னேன்: ‘நானே உமது தேவனாகிய கர்த்தர்.
RCTA அவர்களிடம் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் இஸ்ராயேலைத் தேர்ந்துகொண்ட நாளில், யாக்கோபின் குலத்தார்க்கு நாம் கைநீட்டி ஆணையிட்டு, எகிப்து நாட்டில் அவர்களுக்கு நம்மை வெளிப்படுத்தி, 'ஆண்டவராகிய உங்கள் இறைவன் நாமே' என்று கையுயர்த்தி ஆணையிட்டோம்.
ECTA அவர்களிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் இஸ்ரயேலைத் தேர்ந்துகொண்ட நாளில், யாக்கோபின் வழிமரபினர்க்கு உறுதிமொழி அளித்து, எகிப்து நாட்டில் என்னை அவர்களுக்கு , ";நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்" என்று ஆணையிட்டுக் கூறினேன்.