Versions
TOV அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
IRVTA அப்பொழுது ராகேல்: “தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பெயரிட்டாள்.
ERVTA ராகேல் மகிழ்ந்து, "தேவன் என் பிரார்த்தனையைக் கேட்டு, எனக்கு ஒரு மகனை கொடுத்தார்" என்று கூறி அவனுக்குத் தாண் என்று பெயர் வைத்தாள்.
RCTA இராக்கேலும்: ஆண்டவர் என் வழக்கைத் தீர்த்து, என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு புதல்வனைத் தந்தார் என்று சொல்லி, இதன் பொருட்டு அவனுக்குத் தான் என்னும் பெயரை இட்டாள்.
ECTA ராகேல், "ஆண்டவர் எனக்கு நீதி வழங்கி, என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு மகனைத் தந்தார்" என்று சொல்லி அவனுக்குத் "தாண் "(5 ) என்னும் பெயரிட்டார்.