Versions
TOV துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.
IRVTA துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளமாட்டான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து யெகோவாவுடைய மகத்துவத்தைக் கவனிக்காமல்போகிறான்.
ERVTA தீயவன் நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளமாட்டான். அவனிடம் நீர் இரக்கம் மட்டும் காட்டினால், அவன் கெட்டவற்றை மட்டும் செய்வான். அவன் நல்லவர்களின் உலகில் வாழ்ந்தாலும் கூட, கர்த்தருடைய மகத்துவத்தை தீயவன் எப்பொழுதும் கண்டுகொள்ளமாட்டான்.
RCTA இறைப்பற்றில்லாதவனுக்கு இரக்கம் காட்டினாலும் அவன் நீதியைக் கற்றுக் கொள்ளமாட்டான்; பரிசுத்தர்களின் நாட்டில் அவன் பாவங்களைச் செய்தான், ஆண்டவருடைய மகிமையை அவன் காணவில்லை.
ECTA கொடியவர்களுக்கு நீர் இரக்கம் காட்டினாலும் அவர்கள் நேரியன செய்யக் கற்றுக் கொள்வதில்லை; நேர்மை நிறைந்த நாட்டில் அவர்கள் அநீதி செய்கின்றனர்; ஆண்டவரின் மாட்சியை அவர்கள் காண்பதில்லை.