Versions
TOV கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.
IRVTA யெகோவா என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ சாப்பிடமுடியாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.
ERVTA கர்த்தர் என்னிடம், "நீ என்ன பார்க்கிறாய், எரேமியா?" என்று கேட்டார். நான், "நான் அத்திப் பழங்களைப் பார்க்கிறேன். நல்லப் பழங்கள் மிகவும் நன்றாக உள்ளன. அழுகிய பழங்கள் மிகவும் அழுகியதாக உள்ளன. அவை உண்ண முடியாத அளவிற்கு அழுகியுள்ளன" என்று பதில் சொன்னேன்.
RCTA அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "எரேமியாசே, நீ என்ன காண்கிறாய்?" என்று கேட்டார். "அத்திப் பழங்களைக் காண்கிறேன்; அவற்றுள் நல்ல பழங்கள் மிக்க நல்ல பழங்களாகவும், கெட்ட பழங்கள் தின்ன முடியாத அளவுக்கு மிக்க கெட்ட பழங்களாகவும் இருக்கின்றன" என்றேன்.
ECTA அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து, "எரேமியா, நீ காண்பது என்ன?" என்று கேட்டார். நான் "அத்திப்பழங்களைப் பார்க்கிறேன். நல்லவை மிக நல்லவையாயும், தீயவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன" என்றேன்.